தேசிய சித்திர மற்றும் பேச்சுப் போட்டி மூலம் தங்கள் நலனைப் பற்றி பிரதிபலிக்க சிறுவர்களை ஊக்குவிக்கிறது சிறுவர் தினத்தை நினைவுகூரும் ஒரு புதிய அணுகுமுறையாக, Stop Child Cruelty Trust (SCC) அமைப்பானது பல்வேறு பொதுத் திட்டங்கள் மூலம் சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ‘#ஓர்எண்மட்டுமே சிறுவர் பாதுகாப்பு மாதத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆதரவுப் பிரசாரத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, சிறுவர் மீதான வன்முறை தொடர்பான தண்டனைச் சட்டக்கோவையை மாற்ற பாராளுமன்றத்தை வலியுறுத்துவது ஆகும். குறிப்பாக, பாடசாலைகளால் பிள்ளைகளுக்கு விளைவிக்கப்படும் உடல் ரீதியான தண்டனையை சட்டவிரோதமானதாகவும், சிறுவர்யின் உரிமையை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் அங்கீகரித்ததன் பின்னணியில் இதனை மேற்கொள்வதாகும். இந்த நோக்கத்தை வலுப்படுத்த, SCC உம் அதே எண்ணம் கொண்ட சிவில் சமூக அமைப்புகள், மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து இலங்கையின் முதல் சிறுவர் பாதுகாப்பு கூட்டணியை உருவாக்க கைகோர்க்கின்றது.
#ஓர்எண்மட்டுமே சிறுவர் பாதுகாப்பு மாதத்தின் கீழ் நடத்தப்படும் தேசிய சித்திர மற்றும் பேச்சுப் போட்டியின் அறிமுகமே இந்த மெய்நிகர் நிகழ்வின் சிறப்பம்சமாகும். 6 வயது முதல் 18 வயது வரையிலான பிள்ளைகளுக்கு நாட்டின் சிறுவர் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் குறித்த தனித்துவமான சொந்த முன்னோக்கைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் நலன் சார்ந்த தீர்மானம் மேற்கொள்வதில் நேரடியாக ஈடுபட ஊக்குவிக்கவும் ஒரு தளத்தை உருவாக்குவதை இந்த போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது. போட்டி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, தயவுசெய்து விஜயம் செய்யுங்கள் www.facebook.com/groups/211381800981039.
#ஓர்எண்மட்டுமே சிறுவர் பாதுகாப்பு மாதத்தின் பின்னால் உள்ள நோக்கம் தொடர்பில் தனது கருத்தை எடுத்துரைத்த, அமைப்பின் தலைவியான வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க, சொர்க்கமாக கருதப்படும் இந்தத் தீவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்திருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நமது சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் மேற்கொண்ட முயற்சிகள் போதுமானவையாக தெரிவியவில்லை. பிள்ளைகள் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டு சமூகப் பொறுப்பென்பதுடன், Stop Child Cruelty Trust அமைப்பானது, பிள்ளைகளை உரிமை கொண்டவர்களாக அங்கீகரிப்பதற்கு நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களுக்கு அறிவையும் ஈடுபாட்டையும் அதிகரித்து வலுவூட்டுவதற்கான ஆற்றல் மிகுந்த உந்துசக்தியாக மாறுவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
கடந்த ஆண்டில், இலங்கையில் ஐந்து சிறுவர்கள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சாசனம் (UNCRC) இல் கையெழுத்திட்ட மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர நிலைபேறான வளர்ச்சி இலக்கு 16.2 க்கு உறுதியளித்த ஒரே தெற்காசிய நாடு என்ற போதிலும், நாடு இன்னும் தேசிய சிறுவர் பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், இலங்கையில் சிறுவர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவருமான, கௌரவ. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உரையாற்றினார். அவர் 1991 இல் UNCRCயில் கையெழுத்திட்ட பிறகு, 1996 இல் சிறுவர் மீதான வன்முறை தண்டனைச் சட்டக்கோவை 308A இல் திருத்தங்களுக்கு அதிகாரமளித்தார். 1998 இல் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவியதுடன், 2005 இல் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யகல்வி
தனது பதவிக் காலத்தில் விசேட சிறுவர் பாதுகாப்பு செயலணியின் மகத்தான சாதனைகளை தெளிவுபடுத்திய, திருமதி குமாரதுங்க, அரசாங்க அதிகாரிகள் அரசு சாரா நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, விடயங்களை அரசியலாக்காமல் சிறுவர் பாதுகாப்பு நெருக்கடியை திறம்பட தீர்க்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு சமூகத்தில் நாகரிகத்தின் இறுதி அளவீடு ஆகும், இலங்கையில் தற்போதைய சிறுவர் பாதுகாப்பு நெருக்கடிக்கு தீர்வு காண சிறுவர் பாதுகாப்பு கூட்டணியை நிறுவுவதில் Stop Child Cruelty Trust இன் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன், என்று அவர் மேலும் குறிப்பிட்டார். கௌரவ.
சட்டத்திற்கான கௌரவ பேராசிரியர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சாவித்திரி குணசேகர நிகழ்வின் முக்கிய பேச்சாளராக இருந்தார். பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்கும் குழு மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உலகளாவிய பங்குடமையின் முன்னாள் உறுப்பினருமான, பேராசிரியர் குணசேகர சட்ட மற்றும் கொள்கை சிறுவர் பாதுகாப்பு சீர்திருத்தங்களுக்கு தீவிரமாக பங்களித்து வருகிறார். தொடர்புடைய அதிகாரிகளின் வெறும் வார்த்தை ஜாலத்தை நிராகரிப்பதன் மூலம் சட்ட அமுலாக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான கொடுமைக்கு பதிலளிப்பதன் மூலம் சிறுவர்களுடன் இணைதல் ஒரு ஆக்கப்பூர்வமான உத்தியென்பதுடன், இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும், என்றார்.
#ஓர்எண்மாத்திரமே சிறுவர் பாதுகாப்பு மாதமானது, பல்வேறு நிகழ்வுகளை நடாத்துகின்றது. இதில் ஒக்டோபர் 1 முதல் 2021 நவம்பர் 20 வரை ஒவ்வொரு வார இறுதியிலும் நடைபெறும் ஒன்லைன் மன்றங்களின் தொடரும் உள்ளடங்குகின்றது. பிரசாரம் மற்றும் பிற நிகழ்வுகளின் கீழ் வரவிருக்கும் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ள, விஜயம் செய்யுங்கள் visit www.facebook.com/stopchildcruelty. இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் www.stopchildcruelty.com தலத்தை விஜயம் செய்யுங்கள் அல்லது மின்னஞ்சல் info@stopchildcruelty.com மூலம் தொடர்ப்புக் கொள்ளுங்கள்.